கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்தியர்: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்திய வீரர்களில் ஒருவர் என ஹர்ஷல் படேலைப் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்
கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்தியர்: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்திய வீரர்களில் ஒருவர் என ஹர்ஷல் படேலைப் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆர்சிபி அணியின் ஹர்ஷல் படேல், 8 விக்கெட்டுகளுடன் நடராஜனுடன் இணைந்து 4-ம் இடத்தில் உள்ளார். அதேபோல எகானமியில் 9.46 என 6-ம் இடத்தில் உள்ளார். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி, ரூ. 10.75 கோடிக்கு ஹர்ஷல் படேலைத் தேர்வு செய்தது. 

தன்னுடைய யூடியூப் சேனலில் ஹர்ஷல் படேல் பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

ஹர்ஷல் படேலின் பந்துவீச்சு ஒவ்வொரு ஆட்டத்திலும் மெருகேறிக்கொண்டு வருகிறது. பந்துவீச்சில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசினார். கடைசிக்கட்ட ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்திய வீரர்களில் அவரும் ஒருவர் என்றார். பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார் ஹர்ஷல் படேல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com