பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் நடப்பு தொடரின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 19வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
ராஜஸ்தான் அணியின் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் மோதவுள்ளது.