பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

கொல்கத்தாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!
Swapan Mahapatra
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் விளாசி வென்றது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமான சேஸிங் வெற்றியை இந்த ஆட்டத்தின் மூலம் பதிவு செய்து சாதனை படைத்தது பஞ்சாப். 

இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முக்கியமாக வெற்றி பெற்றுள்ளோம். கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவருகிறது. எங்களுக்கு கடந்த சில வாரம் கடினமான நாள்களாக இருந்தன. ஆனால் தாக்குப்பிடித்திருந்தோம்.

வீரர்களின் பயிற்சியும் பயிற்சியாளர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. சிறிய ஆடுகளம்; ஈரப்பதம் வேறு இருப்பதால் சிக்ஸர் அடிக்க எளிதாக இருந்தது. ஜானி பேர்ஸ்டோ அற்புதமான ஆட்டம். சஷாங் சிங் இந்தத் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு எனலாம்; ஆஷ்டதோஷுயும் இதில் சேர்க்கலாம். எங்களது வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது.

பேஸ்பால் என்ற வார்த்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் சேர்ந்த பிறகு இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தினால் உருவானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com