முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானதல்ல: ஜெய் ஷா அதிரடி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானதில்லை எனக் கூறியுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

News image
Updated On :10 மே 2024, 12:16 pm IST

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு அணியினால் அதிக ரன்கள் அடிக்க முடிகிறது.

இதனை எதிர்க்கும் விதமாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் உள்ளிட்டோர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:

இம்பாக்ட் விதிமுறைகள் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இதனால் மேலும் இரண்டு இந்தியர்கள் விளையாட முடியும் என்ற நன்மை இருக்கிறது. இருப்பினும் இது குறித்து வீரர்கள் குற்றம்சாட்டினால் இதைக் குறித்து பேசுவோம். இதுவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. உலகக் கோப்பை முடிந்தபிறகு இது குறித்து விவாதிப்போம்.

உலகக் கோப்பை முடிந்தப் பிறகு வீரர்கள், அணி நிர்வாகம், ஒளிபரப்பு உரிமையாளர்கள் உடன் கலந்தாலோசிக்கப்படும். இது நிரந்தரமான விதி கிடையாது. இதுவுமின்றி பயனில்லை எனில் இதை கடந்துவிடுவோம்.

உலகக் கோப்பைக்கு ஓய்வு எனக் கருதாமல் இதைவிட நல்ல பயிற்சி இல்லை என்றே சொல்லுவேன். இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வீரர்கள் பந்து வீசுகிறார்கள். டிராவிஸ் ஹெட்டுக்கு பும்ரா எங்கு பந்து வீச வேண்டும் எனக் கற்றுகொள்ளலாம். இதைவிட சிறப்பான வாய்ப்பு எங்கும் கிடைக்காது. மகளிர் கிரிக்கெட்டுக்கு 51 சதவிகிதமும் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு 49 சதவிகிதமும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.