
இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் ஃபேன்ஸ் (ரசிகர்கள்) அனைவரும் இன்றையப் போட்டி நிறைவடைந்த பிறகு, மைதானத்தில் காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது எனப் பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.