வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

போட்டியின் நடுவே திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? மௌனம் கலைத்த பாண்டியா!

முக்கியமான நேரத்தில் திலக் வர்மாவை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றியது பேசுபொருளாகியுள்ளது.

News image

ஹார்திக் பாண்டியா - படம்: ஏபி

Updated On :5 ஏப்ரல் 2025, 10:49 am IST

திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நேற்றிரவு மும்பை, லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 203/8 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ வெற்றி பெற்றது. மும்பை அணியில் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை 18.5ஆவது பந்தில் போட்டியில் இருந்து காயமின்றி ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேற்றப்பட்டார்.

இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு இது குறித்து பாண்டியா கூறியதாவது:

திலக் வர்மாவை வெளியேற்றியது வெளிப்படையானது. எங்களுக்கு சில ஷாட்டுகள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுமாதிரி சில நாள்கள் வரும். எவ்வளவு முயற்சித்தாலும் பேட்டில் பந்து படாது.

ஒட்டுமொத்தமாக இது பேட்டிங் குழுவின் தோல்வி. நாங்கள் அணியாக வெல்கிறோம், அணியாக தோற்கிறோம். யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. பேட்டிங் குழுவின் தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

தோற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் ஃபீல்டிங்கில் 10-15 ரன்களை கூடுதலாக வழங்கிவிட்டோம் என்றார்.

பலரும் பாண்டியாவின் முடிவினை விமர்சித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.