முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

போட்டியின் நடுவே திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? மௌனம் கலைத்த பாண்டியா!

முக்கியமான நேரத்தில் திலக் வர்மாவை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றியது பேசுபொருளாகியுள்ளது.

ஹார்திக் பாண்டியா - படம்: ஏபி

Published On :5 ஏப்ரல் 2025, 11:00 am IST

திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நேற்றிரவு மும்பை, லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 203/8 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ வெற்றி பெற்றது. மும்பை அணியில் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை 18.5ஆவது பந்தில் போட்டியில் இருந்து காயமின்றி ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேற்றப்பட்டார்.

இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு இது குறித்து பாண்டியா கூறியதாவது:

திலக் வர்மாவை வெளியேற்றியது வெளிப்படையானது. எங்களுக்கு சில ஷாட்டுகள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுமாதிரி சில நாள்கள் வரும். எவ்வளவு முயற்சித்தாலும் பேட்டில் பந்து படாது.

ஒட்டுமொத்தமாக இது பேட்டிங் குழுவின் தோல்வி. நாங்கள் அணியாக வெல்கிறோம், அணியாக தோற்கிறோம். யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. பேட்டிங் குழுவின் தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

தோற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் ஃபீல்டிங்கில் 10-15 ரன்களை கூடுதலாக வழங்கிவிட்டோம் என்றார்.

பலரும் பாண்டியாவின் முடிவினை விமர்சித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.