
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களால் ரன் வேட்டை நடத்த முடியவில்லை. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(எஸ்ஆர்எச்) 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களை மட்டுமே திரட்டியது.
அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 153 ரன்கள் வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.4 ஓவர்களிலேயே எட்டி 3-ஆவது வெற்றியை ருசித்தது.