
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.
அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
சிவக்குமார் வெளியிட்டுள்ள சிறப்பு காணொலியில் அவர் பேசியிருப்பதாவது: ”18 ஆண்டு கால துணிச்சல்மிகு காத்திருப்பு இது...
ஒவ்வொருத்தருடைய பிரார்த்தனைக்கும், ஒவ்வொருவரின் கைத்தட்டலுக்கும், ஒவ்வொருவரின் மனமுறிவுக்கும் - இவையனைத்துக்கும் இன்றுடன் முடிவுரை...”
”ஒரு ஆட்டம் என்பதையும் தாண்டிய விஷயம் இது...
இது நம்முடைய தருணம், நமது கோப்பை...
ஆர்சிபிக்கு வாழ்த்துகள் - கர்நாடகம் உங்கள் பக்கம் நிற்கிறது!” என்று பேசி பதிவிட்டுள்ளார்.
முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன், இன்று(ஜூன் 3) அகமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆர்சிபி சீருடையில் சிவக்குமார் பேசிய விடியோவைக் காண...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.