திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ்த்து!

ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள்(ஆர்சிபி) பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார்

News image

கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.

Updated On :3 ஜூன் 2025, 4:33 pm IST

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.

அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

சிவக்குமார் வெளியிட்டுள்ள சிறப்பு காணொலியில் அவர் பேசியிருப்பதாவது: ”18 ஆண்டு கால துணிச்சல்மிகு காத்திருப்பு இது...

ஒவ்வொருத்தருடைய பிரார்த்தனைக்கும், ஒவ்வொருவரின் கைத்தட்டலுக்கும், ஒவ்வொருவரின் மனமுறிவுக்கும் - இவையனைத்துக்கும் இன்றுடன் முடிவுரை...”

”ஒரு ஆட்டம் என்பதையும் தாண்டிய விஷயம் இது...

இது நம்முடைய தருணம், நமது கோப்பை...

ஆர்சிபிக்கு வாழ்த்துகள் - கர்நாடகம் உங்கள் பக்கம் நிற்கிறது!” என்று பேசி பதிவிட்டுள்ளார்.

முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன், இன்று(ஜூன் 3) அகமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆர்சிபி சீருடையில் சிவக்குமார் பேசிய விடியோவைக் காண...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.