
டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளி வென்றார்.
டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் 2.06 மீட்டர் தாண்டி நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் வெள்ளி வென்ற நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இதனிடையே பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.