ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா போரோகைன்.
மகளிர் குத்துச்சண்டையின் 69 கிலோ பிரிவின் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியின் நாடின் அபட்ஸை இந்திய வீராங்கனை லவ்லினா இன்று எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் நாடினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், காலிறுதி போட்டியில் லவ்லினா வெற்றி பெற்றாலே இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.