டோக்கியோ குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கல் தோல்வியடைந்தார்.
டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் 52 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் வீரர் அமித் பங்கல், கொலம்பியாவின் மார்டினஸை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் முடிவில் 4-1 என்ற கணக்கில் அமித் பங்கலை வீழ்த்தி வெற்றிப்பெற்றார் கொலம்பியாவின் மார்டினஸ்.
இதையடுத்து ஆடவர் 52 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கல் தோல்வியடைந்தார்.
கடந்த ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மார்டினஸ் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.