மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஒலிம்பிக் போட்டி தொடக்கம்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியீடு!

ஒலிம்பிக் போட்டி தொடக்கத்துக்கான சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை, தனது முகப்பு பக்கத்தில் கூகுள் காட்சிப்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2024, 10:05 am IST

பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தை சிறப்பு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்துடன் கூகுள் வெளியிட்டுள்ளது.

தொடக்க விழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, (ஜூலை 24) வில்வித்தை, கால்பந்து, கைப்பந்து மற்றும் ரக்பி ஆகியவற்றில் ஆரம்ப சுற்றுகளுடன் போட்டி தொடங்கியது.

இந்திய அணி சார்பில் 70 ஆண்கள், 47 பெண்கள் உள்பட 95 பதக்கங்களுக்காக 69 போட்டிகளில் 117 போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

பாரிஸில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களில் ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஓவியத்துக்கான வடிவமைப்பாளரின் பெயரை கூகுள் வெளியிடவில்லை. பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் விலங்குகள் நீந்துவது போல அந்த சித்திரத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26) பாரீஸ் நகரில் அதிகாரபூர்வமாக துவங்குகிறது. திறப்பு விழா பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் நடைபெறும். கொடிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிறைவு விழா ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.