ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

சச்சின் வெளியிட்ட 'உயிர் நண்பர்கள்' செல்ஃபி: வினோத் காம்ப்ளி ஆஜர்!

சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட தனது உயிர் நண்பர்களுடனான செல்ஃபி புகைப்படத்தில் வினோத் காம்ப்ளி இடம்பிடித்திருந்தார்.

News image
Updated On :10 நவம்பர் 2017, 1:55 pm

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை தற்போது வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் வினோத் காம்ப்ளி இடம்பிடித்துள்ளார். 

இந்தப் புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் உட்பட தனது உயிர் நண்பர்களுடனான செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.

சிறு வயது முதலே நண்பர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். மேலும், உள்ளூர் போட்டிகளில் இருந்து இந்திய அணி வரை ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள்.

குறிப்பாக 1988-ம் ஆண்டு நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது சச்சின்-காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனைப் புரிந்தது. அன்று முதல் இவர்களின் கிரிக்கெட் பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது.

இந்நிலையில், 1996-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டித் தொடருக்குப் பின்னர் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் சரியாக விளையாட காரணத்தால் வினோத் காம்ப்ளி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அத்துடன் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறாத காம்ப்ளி, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நடந்த தொலைக்காட்சிப் பேட்டியின் போது, சச்சின் தன்னை இக்கட்டான தருணங்களில் இருந்து காக்கத் தவறி விட்டதாக தெரிவித்தார்.

ஆனால், இவர்கள் இருவரது நட்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார்.

இது இவர்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளியை பெரிதாக்கியது. இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவின்போது இருவரும் மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை உறுதிபடுத்தினர்.

அப்போது, ''சச்சின் அன்றில் இருந்து இன்று வரை மாறவே இல்லை. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் சச்சின்'' என்று காம்ப்ளி அந்த சந்திப்பின் புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.