ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் மும்பைக்கும்-பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி ஆடிக்கொண்டிருந்தபோது 13-வது ஓவரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஃபீல்டிங் செய்த பாண்டியா அதை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பக்கம் வீசினார். சரியாகப் பிடிப்பதற்கு முன்பே, அந்த த்ரோ, இஷானின் முகத்தைத் தாக்கியது. வலது கண் அருகே பந்து பட்டதால் இஷான் நிலைகுலைந்து போனார். கீழே விழுந்து துடிதுடித்தார். உடனே மருத்துவக்குழு விரைந்து வந்து ஆடுகளத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். காயம்பட்ட பகுதியில் உடனடியாகச் சிவந்துபோனது.
19 வயது இஷான் கிஷன் பிறகு மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்யா தரே செயல்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றத்தில் விதி மீறலா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்! | TVK

இன்னும் 3 நாள்களில் திருமணம்... நிச்சயிக்கப்பட்ட இளைஞர், உறவினர்கள் சாலை விபத்தில் பலி!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்



