கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மும்பை டெஸ்ட் தேநீர் இடைவேளை: முரளி விஜய், கோலி சதம்; இந்தியா 348/6

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:53 pm

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகள்  மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.

அணித்தலைவர் விராத் கோலி 83 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.

முன்னதாக முதல் பாதியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் டெஸ்ட் போட்டியில் தனது எட்டாவது சதத்தினை நிறைவு செய்தார். உணவு இடைவேளைக்கு பிறகு அவர் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.தேநீர் இடைவேளைக்குப் பிறகு விராத் கோலியும் சதமடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.