கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மும்பை டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 451/7 

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்து, 

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:33 am

DIN

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா இங்கிலானது அணிகள்  மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்தது.

சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் முரளி  விஜய் டெஸ்ட் போட்டியில் தனது எட்டாவது சதத்தினை நிறைவு செய்தார். உணவு இடைவேளையின் பொழுது இந்தியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு நன்கு விளையாடி வந்த முரளி விஜய் ரஷீத் பந்துவீச்சத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  அவருக்கு பிறகு கேப்டன் கோலி களமிறங்கினார். ஆனாலும் ஆறு முனையில் மூன்று பேர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா தடுமாறியது.தேநீர் இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்திருந்தது. அப்பொழுது அணித்தலைவர் விராத் கோலி 83 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதற்கு பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 187 பந்துகளில் தனது சத்தினை பூர்த்தி செய்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.     ஆட்டத்தின் 129-ஆவது ஓவரில் இந்தியா 400 ரன்களைக் கடந்தது.

இறுதியாக முன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்களை எடுத்திருந்தது. விராத் கோலி 147 ரன்களுடனும்,  ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் ,ஆதில் ரஷீத் மற்றும் மொயீன் அலி ஆகிய மூவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.