மும்பை டெஸ்ட் உணவு இடைவேளை: கோலி இரட்டை சதம்; இந்தியா 579/7
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின் போது, இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்துள்ளது.


மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின் போது, இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலானது அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்களை எடுத்துள்ளது.
அணித்தலைவர் விராத் கோலி 212 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 92 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. 147 ரன்களுடன் தொடர்ந்த கோலி 302 பந்துகளில் தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இதில் 23 பவுண்டரிகளும் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...