அமெரிக்க ஓபன்: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற வீரர்கள்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்றில், ஆண்டி முர்ரே தோல்வி!
அமெரிக்க ஓபன்: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற வீரர்கள்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவு அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஆண்டி முர்ரே தோல்வியடைந்துள்ளார்.  

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 9-ஆம் நிலை வீரரான பிரான்சின் ஜோ வில்ஃப்ரைடு சோங்காவை எதிர்கொண்டார் செர்பியாவின் ஜோகோவிச். இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில், 3-ஆவது செட்டின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் சோங்கா போட்டியிலிருந்து விலகினார். இதனால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் தனது அரையிறுதியில், பிரான்சின் கேல் மான்ஃபில்ஸை எதிர்கொள்கிறார். முன்னதாக மோன்ஃபில்ஸ் தனது காலிறுதியில், சக நாட்டவரான லூகாஸ் பூய்லேவுடன் மோதி 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த லூகாஸிடம், காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் நடால் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்டி முர்ரே தோல்வியடைந்துள்ளார். நிஷிகோரி, 1-6, 6-4, 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் முர்ரேவைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். 

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்கா 7-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டெல் போட்ரோவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அவர் நிஷிகோரியுடன் மோதவுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com