இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: வீரேந்திர சேவாக் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: வீரேந்திர சேவாக் விண்ணப்பம்
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் வரும் 18-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.
சேவாக் தவிர, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, முன்னாள் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் பிபஸ், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ், இந்திய 'ஏ' அணியின் முன்னாள் பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுடன் அனில் கும்ப்ளேவும் போட்டியில் இருக்கிறார்.
இந்தியாவுக்கு கிடைத்த தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான சேவாக், தனது அதிரடியால் பல்வேறு ஆட்டங்களின் முடிவை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியவர். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் சேவாக்கிற்கு, பயிற்சியளித்த அனுபவம் ஏதும் கிடையாது. எனினும் பிசிசிஐ முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனைப்படியே சேவாக் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில் அனில் கும்ப்ளே மீது பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அதனால் சேவாக், டாம் மூடி இடையேதான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேவாக்கிற்கு பயிற்சியளித்த அனுபவம் கிடையாது என்றாலும், அவருக்கு பிசிசிஐ நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com