கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கை அணியின் துணை கேப்டன் உபுல் தரங்கா இரண்டு போட்டிகளுக்கு ‘சஸ்பெண்ட்’

நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து வீச அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால், இலங்கை அணிக்கு தாற்காலிக கேப்டனாக செயல்பட்ட துணை கேப்டன் உபுல் தரங்கா...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:40 pm

DIN

பர்மிங்காம்: நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து வீச அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால், இலங்கை அணிக்கு தாற்காலிக கேப்டனாக செயல்பட்ட துணை கேப்டன் உபுல் தரங்கா, இரண்டு போட்டிகளுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.   

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி 98 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் முழுமையான உடல் தகுதி இல்லாததால் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டனான உபூல் தரங்கா தற்காலிக கேப்டனாக பணியாற்றினார்.

இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் 50 ஓவரை வீசி முடிக்கவில்லை. இதனால் ஐ.சி.சி விதிகளின்படி, மேட்ச் நடுவர் டேவிட்பூன்  வீரர்களின் நடவடிக்கைக்காக, தற்காலிக கேப்டன் உபுல் தரங்கா மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி அடுத்து வரும் 2 போட்டிகளுக்கு உபுல் தரங்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் விளைவாக, அடுத்து நடக்கவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் அவரால்  விளையாட இயலாது. இது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.