கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மீண்டும் மோசமாக விளையாட மாட்டோம்: கோலி உறுதி

நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இது எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் நடைபெற வாய்ப்பில்லை.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:08 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி பெங்களூரில் நாளை தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் மோதி வருகிறது. இதில் புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 

பெங்களூர் டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி கூறியதாவது:

எங்களால் இந்த டெஸ்ட் தொடரை வெல்லமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதை ஒரு பெரிய சவாலாகக் கொண்டுள்ளோம். தொடரில் திருப்புமுனை ஏற்படுத்தி வழக்கமாக விளையாடும் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்த முனைப்புடன் உள்ளோம். நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இது எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் நடைபெற வாய்ப்பில்லை. இதுபோன்று நிச்சயமாக இனி மோசமாக விளையாடமாட்டோம் என்பதை நான் உறுதியாகக் கூறமுடியும். 

தோல்வியினால் என்னென்ன தவறுகள் செய்தோம் என்று அலச ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றிபெறும்போது எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தமுடியாது. யாராவது ஒரு வீரர் அக்குறைகளைச் சரிபடுத்திவிடுவார். எனவே டெஸ்ட் பயணத்தில் தோல்விகளும் முக்கியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.