ஸ்மித்துக்குப் பதிலாக ‘சிக்ஸர்’ கிளாசெனைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி!

ஸ்மித்துக்குப் பதிலாக ‘சிக்ஸர்’ கிளாசெனைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி!

தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஹெயின்ரிச் கிளாசெனை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பந்தின் தன்மையை மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட் முயன்றது விடியோவில் பதிவாகியிருந்தது. இந்தச் செயலுக்கு கேப்டன் ஸ்மித்தும் உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பு இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி ஒருவருடம் விளையாடத் தடை விதித்ததையடுத்து ஸ்மித், வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்மித்துக்குப் பதிலாக 26 வயது தென் ஆப்பிரிக்க வீரர் ஹெயின்ரிச் கிளாசெனை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு ஆளானார் கிளாசென். முக்கியமாக சஹாலின் பந்துவீச்சில் அவர் அடித்த சிக்ஸர்களை இந்திய ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். அவருடைய அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் அணி. 

ஏப்ரல் 9 அன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தை ஆடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com