நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனை டேமி 37 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணித் தரப்பில் பூணம் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.