இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு கடினமாக இருக்கும்: மெக்ரத் கணிப்பு

முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு சவால் நிறைந்ததாகவும், கடினமாகவும் இருக்கும் என கிளென் மெக்ரத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:27 pm IST

முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு சவால் நிறைந்ததாகவும், கடினமாகவும் இருக்கும் என கிளென் மெக்ரத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ரத் கூறியதாவது:

இங்கிலாந்திடம் அதன் சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-ஆவது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும். இருப்பினும் இதுபோன்ற சூழ்நிலைகளை இந்திய அணி எதிர்கொண்டுள்ளது. எனவே 2-ஆவது டெஸ்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.

விராட் கோலி மற்றும் இஷாந்த் ஷர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதர வீரர்களும் நிச்சயம் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அதுபோல இங்கிலாந்து அணியும் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த சரியான வியூகம் வகுத்து அதில் வெற்றிபெற்றது. எனவே இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும்.

விராட் கோலியிடம் மிகச் சிறந்த திறமை உள்ளது. அவர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்க தகுதி உடையவர். தற்போதைய நிலையில், அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் பாதி நிலையை தான் கடந்துள்ளார். எனவே இப்போதே உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூற முடியாது. இருப்பினும் திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அது இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்றார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. பின்னர் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.