கிட்டத்தட்ட நாளே முடிந்துவிட்டது. அப்போது, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ்.
இதை ஒரு ரசிகர் சுட்டிக்காட்டினார். சுதந்திர தினம் முடிவடைந்துவிட்டது. ஒரு பிரபலம் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்றார்.
வழக்கமாக இதுபோன்ற எதிர்வினைகளை பிரபலங்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் மிதாலி ராஜ், எதனால் தாமதமாக வாழ்த்துக் கூற நேர்ந்தது என்று விவரித்தார். அவர் கூறியதாவது:
என்னை ஒரு பிரபலமாக எண்ணியதற்குப் பெருமை கொள்கிறேன். நான், 1999 முதல் இந்திய அணி சார்பாகப் பங்குபெறும் ஒரு விளையாட்டு வீராங்கனை மட்டுமே. தற்போது சேலஞ்சர் கோப்பைக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஆட்டம் நடைபெறும் சமயங்களில் என்னிடம் செல்போன் இருக்காது. எதனால் வாழ்த்து கூற தாமதமானது என்பதைத் தற்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். சுதந்திர தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

அல்லேரி மலைக் கிராமத்துக்கு 8 கி.மீ. தாா் சாலை அமைக்கப்படும்

வேதாரண்யம் பகுதியில் 8 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



