தேசிய செஸ் சாம்பியன் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்...
தேசிய செஸ் சாம்பியன் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஜம்முவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி சுற்றுக்கு முன்பு வரை தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம் 9.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற 13-வது மற்றும் கடைசி சுற்றில் ஆர்.ஜி. கிருஷ்ணாவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததையடுத்து 10 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தேசிய செஸ் சாம்பியன் ஆகியுள்ளார் அரவிந்த் சிதம்பரம். 9 புள்ளிகளுடன் கடைசி சுற்றை எதிர்கொண்ட வைபவ் சூரி, ஸ்ரீஜித் பாலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தார். இதனால் அவரால் முதலிடம் பிடிக்கமுடியாமல் போனது.

கடந்த இரு தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அரவிந்த் சிதம்பரத்தால் 2-ம் இடத்தையே பிடிக்கமுடிந்தது. இந்நிலையில் அவருக்கு இந்த வருடம் சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டத்தை அவர் முதல்முறையாக வென்றுள்ளார். 

மதுரையைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், 8 வயதில் தந்தையை இழந்துள்ளார். அதன்பிறகு செஸ் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்த சென்னைக்கு மாறினார். 2011 முதல் அரவிந்த் சிதம்பரத்துக்கு பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் பயிற்சியளித்து வருகிறார். 2015-ல் 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் அரவிந்த் சிதம்பரம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com