ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இங்கிலாந்து செல்கிறார் இஷாந்த்: முதன்முறையாக உள்ளூர் போட்டியில் பங்கேற்பு

இங்கிலாந்து உள்ளூர் அணிக்காக இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா, முதன்முறையாக விளையாடவுள்ளார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2018, 2:46 pm

இங்கிலாந்தின் பழமையான உள்ளூர் அணிகளில் ஒன்றான சசக்ஸ், அடுத்து நடைபெறவுள்ள உள்ளூர் போட்டித் தொடர்களுக்காக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறும் முதல் 5 கௌன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் இதையடுத்து நடைபெறும் ராயல் லண்டன் ஒருநாள் தொடர்களில் சசக்ஸ் அணிக்காக இஷாந்த் ஷர்மா பங்கேற்கிறார்.

இதன்மூலம் எம்.ஏ.கே.பட்டௌடி மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு அடுத்தபடியாக சசக்ஸ் அணிக்காக விளையாடும் 3-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் நடப்பு சீசனில் இங்கிலாந்து உள்ளூர் தொடரில் புஜாராவுக்கு (யார்க்ஷைர்) அடுத்தபடியாக பங்கேற்கும் 2-ஆவது இந்தியர் ஆவார். இவர்கள் இருவரும் அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஷாந்த் ஷ்ரமா கூறியதாவது:

மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க உள்ளூர் அணியான சசக்ஸுக்கு விளையாடுவதில் பெருமை அடைகிறேன். என்னை தேர்வு செய்ததற்காக சசக்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அணிக்காக எனது சிறந்த பங்களிப்பை நிச்சயம் அளிப்பேன் என்றார்.

இஷாந்த் வருகை குறித்து சசக்ஸ் அணி நிர்வாக இயக்குநர் கீய்த் க்ரீண்ஃபீல்ட் தெரிவித்ததாவது:

அடுத்து நடைபெறும் ஐபிஎல் தொடர் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இல்லாத சூழலில் இஷாந்தின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவிலான வேகப்பந்துவீச்சாளர் எங்கள் அணியுடன் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. அனுபவ ரீதியல் இஷாந்த் நிச்சயம் சிறந்த முன் உதாரணமாக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்த வகை ஆடுகளத்தில் அவருடைய பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமையும் என்றார்.

இஷாந்த் ஷர்மா போன்ற சர்வதேச வீரரின் வருகை சிறப்பானதாகும். அவரின் அனுபவம் அணிக்கு உதவிகரமாக அமையும். சசக்ஸ் அணியில் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அவரை நான் வரவேற்கிறேன் என்று சசக்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேஸன் கில்லஸ்பி கூறியுள்ளார். இவர் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.