தாய்மையை அடுத்து வெற்றியுடன் மீண்டும் களமிறங்கினார் செரீனா வில்லியம்ஸ்

தாய்மை அடைந்த பின்னர் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வெற்றியுடன் மீண்டும் களமிறங்கியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
தாய்மையை அடுத்து வெற்றியுடன் மீண்டும் களமிறங்கினார் செரீனா வில்லியம்ஸ்
Updated on
1 min read

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு சமீபத்தில் குழந்தைப் பிறந்தது. தனது மகப்பேறு காரணமாக சுமார் 15 மாதங்கள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வில் இருந்தார்.

இதையடுத்து இண்டியன் வெல்ஸ் ஏடிபி தொடரில் மீண்டும் களமிறங்கியுள்ள செரீனா, கஸகஸ்தான் வீராங்கனை ஸரீனா தியாஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்றார். 

அதில், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 2-ஆவது சுற்று ஆட்டத்துக்கு முன்னேறினார். 

நீண்டநாட்களுக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றது சற்று சவாலாக இருந்தது. இருப்பினும் எனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் நோக்கத்துடனேயே பங்கேற்றேன். இதில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று செரீனா வில்லியம்ஸ் கூறினார்.

முன்னதாக, 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ள செரீனா வில்லியம்ஸ், கடைசியாக 2017 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்று விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com