டென்னிஸ் பெடரர் மீண்டும் முதடம்
ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார் ரோஜர் பெடரர்.


ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார் ரோஜர் பெடரர்.
உலகின் முதல்நிலை வீரராக நடாலும், இரண்டாம் நிலை வீரராக பெடரரும் நீடித்து வந்தனர். இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதனால் புள்ளிகளை இழந்த நடால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் முதல் எந்த போட்டியில் பங்கேற்காத நிலையிலும் பெடரர் தற்போது மீண்டும் முதல்நிலை வீரர் ஆகியுள்ளார்.
முன்னாள் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 18-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மாட்ரிட் ஓபன் சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஏடிபி தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் வருமாறு:
ரோஜர் பெடரர் (8670 புள்ளிகள்+1), நடால் (9950-1), அலெக்சாண்டர் வெரேவ் (6015), கிரிகோர் டிமிட்ரோவ் (4870), மரின் சிலிச் (4470),
ஜுவான் டெல் போட்ரோ (4540), கெவின் ஆண்டர்சன் (3360), டொமினிக் தீம் (3545), ஜான் ஐஷ்நர் (3305), டேவின் கோபின் (2930).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...