சென்னை டி20: மூன்று இந்திய வீரர்களுக்கு ஓய்வு!

இந்திய அணி தொடரை வென்றுள்ளதால் மூன்று இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது...
சென்னை டி20: மூன்று இந்திய வீரர்களுக்கு ஓய்வு!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 2-0 எனவும். ஒருநாள் தொடரை 3-1 எனவும் இந்தியாவிடம் இழந்தது. டி20 உலக சாம்பியனான அந்த அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையாவது கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. இரண்டாவது ஆட்டத்தில்  71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரையும் 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது டி20 ஆட்டம்  சென்னையில் வரும் 11-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளதால் 3-வது டி20 ஆட்டத்திலிருந்து மூன்று இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பூம்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சித்தார்த் கெளல் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு மூன்று வீரர்களும் கடைசி டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com