கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள் ஆஸ்திரேலியத் தமிழர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என மைதானத்தில் இருந்த தமிழ்சுடர், பாலாஜி, வீரமணி, சிவராஜ் ஆகிய நான்கு தமிழ் இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள். மேலும் கஜா புயலுக்கு நிதியுதவி கோரும் வாசகங்களும் பதாகைகளில் இடம்பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


