தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெல்டா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்த தமிழ் இளைஞர்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது...

News image
Updated On :26 நவம்பர் 2018, 5:50 am

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள் ஆஸ்திரேலியத் தமிழர்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என மைதானத்தில் இருந்த தமிழ்சுடர், பாலாஜி, வீரமணி, சிவராஜ் ஆகிய நான்கு தமிழ் இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள். மேலும் கஜா புயலுக்கு நிதியுதவி கோரும் வாசகங்களும் பதாகைகளில் இடம்பெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.