இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் வரும் 4-ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் 12-ம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளன. ஆசியக் கோப்பை போட்டி ஓய்வுக்கு பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோலி.
நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ராகுலும் பிருத்வி ஷாவும் விளையாடவுள்ளார்கள். இதையடுத்து பிருத்வி ஷா டெஸ்ட் வீரராக அறிமுகமாகவுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஷர்துல் தாக்குர் நாளை விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களே போதும் என கோலி முடிவெடுத்தால் ஷர்துல் தாக்குர் நாளைய டெஸ்டில் விளையாட வாய்ப்புண்டு. மேலும், இங்கிலாந்தில் விளையாடிய விஹாரி, அணியில் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேதார்நாத் கோயில் நடை திறப்பு எப்போது?

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


