மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கையில் நீண்ட நாள் காயம்: பெடரர் தகவல்

கையில் நீண்ட நாள் காயம் உள்ளது என உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 8:12 pm

கையில் நீண்ட நாள் காயம் உள்ளது என உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது-
கடந்த ஜூன் மாதம் முதல் கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். புல்தரை மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கிய போது இந்த காயம் உண்டானது. கையில் கடும் வலியால் கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளேன்.
ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்களிலேயே கை வலி தென்படுவதால் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றார் பெடரர்.
தற்போது பேஸல் ஏடிபி ஓபன் போட்டியில் பங்கேற்கிறார் பெடரர். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ், மரின் சிலிக், டெனிஸ் ஷபோலபோவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.