புணேவில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த ஆட்டம் டையில் முடிந்தது.
இன்று தேர்வான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பூம்ரா இடம்பெற்றுள்ளார்கள். உமேஷ் யாதவ், ஜடேஜா இடம்பெறவில்லை. கலீல் அகமத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மே.இ. அணியில் பிஷுக்குப் பதிலாக ஃபேபியன் அலன் தேர்வாகியுள்ளார். இது அவருடைய முதல் ஒருநாள் ஆட்டமாகும்.