விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பூம்ரா அபார பந்துவீச்சு: இந்திய அணிக்கு 284 ரன்கள் இலக்கு!

3-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2018, 12:20 pm

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

புணேவில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த ஆட்டம் டையில் முடிந்தது.

இன்று தேர்வான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பூம்ரா இடம்பெற்றுள்ளார்கள். உமேஷ் யாதவ், ஜடேஜா இடம்பெறவில்லை. கலீல் அகமத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மே.இ. அணியில் பிஷுக்குப் பதிலாக ஃபேபியன் அலன் தேர்வாகியுள்ளார். இது அவருடைய முதல் ஒருநாள் ஆட்டமாகும்.

புவனேஸ்வர் குமாரும் பூம்ராவும் ஆரம்பம் முதல் சிறப்பாகப் பந்துவீசி மே.இ. அணி அதிக ரன்கள் குவிக்காமல் பார்த்துக்கொண்டார்கள். ஆறாவது ஓவரில் ஹேம்ராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பவல் 21 ரன்களில் வெளியேறினார். இருவரையும் அற்புதமான பந்துவீச்சால் வெளியேற்றினார் பூம்ரா. சாமுவேல்ஸ் இன்றும் சரியாக விளையாடாமல் 9 ரன்களில் கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஷேய் ஹோப் - ஹெட்மயர் ஜோடி மீண்டும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. ஆனால் கடந்தமுறை போல நீண்ட நேரம் இவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார் ஹெட்மயர். இதன்பிறகு ஹோப்புடன் இணைந்து இந்தமுறையும் நன்கு ஆடினார் கேப்டன் ஹோல்டர். எனினும் அவர் புவனேஸ்வர் பந்துவீச்சில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது பூம்ராவின் அற்புதமான பந்தினால் ஹோப் போல்ட் ஆனார். இதனால் அவரால் இந்தமுறை சதமடிக்க முடியாமல் போனது. 44-வது ஓவரில் அவர் வெளியேறியபோது மே.இ. அணி 227  ரன்கள் எடுத்திருந்தது. இதனால் அந்த அணி 275 ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 9-வது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்து மே.இ. அணி நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார்கள் நர்ஸும் ரோச்சும். நர்ஸ், 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். கடைசியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது மே.இ. அணி. 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பூம்ரா.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.