தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கணக்கில் அஸ்ஸாமை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சாம்பியன்ஷிப்பின் 8வது நாள் போட்டிகள் இன்று நடந்தது.
ஹிமாசல பிரதேச பிரதேச அணி முன்னதாக 2 ஆட்டங்களில் விளையாடி, இரண்டிலும் தோல்வி கண்ட நிலையில் தனது 3வது ஆட்டத்தில் அற்புதமாக ஆடி அஸ்ஸாமை வென்றது. இதனால் அஸ்ஸாம் ம் வெளியேறியது.
இதே ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது 3 லீக் ஆட்டங்களிலும் வென்று 9 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்று காலிறுதியை உறுதி செய்த நிலையில் நாளை இமாசல பிரதேச அணியுடன் கடைசி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெறுகிறது.
ஈ பிரிவு கேரளம்- பாட்டியாலா அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என டிராவில் முடிந்தது.
ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்ற எச் பிரிவு ஆட்டங்ளில் ஹாக்கி கூர்க் அணி 2-1 என ஸ்டீல் பிளான்ட் அணியையும், சாய் அணி 2-1 என அகில இந்திய போலீஸ் அணியையும் வென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷாலின் மகுடம் பட டீசர் வெளியானது!

ஜூன் 11: சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி! லாபம் பெற்ற நிறுவனங்கள் எவை?

உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!





