புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இன்னும் அதிரடியாக விளையாடியிருக்கலாமோ?: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 324 ரன்கள் குவிப்பு!

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது... 

News image
Updated On :26 ஜனவரி 2019, 5:44 am

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. 

பேட்டிங்குக்குச் சாதகமான மெளண்ட் மெளன்கனி மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும் தவனும் 25.2 ஓவர்களில் 154 ரன்கள் குவித்தார்கள். தவன் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 87 ரன்களுக்கு ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 30-வது ஓவரின்போது இந்திய அணியின் ஸ்கோர் 172 என இருந்தபோது அவர் வெளியேறினார். நல்ல நிலைமையில் இருந்ததால் அதன்பிறகு விராட் கோலியும் ராயுடுவும் விரைவாக ரன்கள் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி - ராயுடு ஜோடி கிட்டத்தட்ட 10 ஓவர்கள் விளையாடி 64 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 350 ரன்கள் எடுப்பது கடினம் என அப்போதே கணிக்கப்பட்டது. விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் எடுக்கும் வேகம் இன்னும் குறைந்தது. ராயுடுவும் தோனியும் 39 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். 49 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 46-வது ஓவரில் ஆட்டமிழந்தார் ராயுடு.

எனினும் கடைசிக்கட்டத்தில் தோனியும் தவனும் அதிரடியாக விளையாடி ஒரு நல்ல ஸ்கோரை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தோனி 33 பந்துகளில் 48 ரன்களும் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.