சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

இம்ரான் கான் பின்னணி: பாக். பயிற்சியாளராகும் முன்னாள் வீரர்கள்!

முன்னாள் வீரர்கள் இருவர் பிரதமர் இம்ரான் கான் பின்னணியுடன் தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 12:22 pm IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்கள் இருவர் பிரதமர் இம்ரான் கான் பின்னணியுடன் தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 உலகக் கோப்பையுடன் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய பயிற்சியாளர் குழுவை தேர்வு செய்யும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமை தேர்வாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளராகவும், வக்கார் யூனிஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் இம்ரான் கான் இவர்களுக்கு சிபாரிசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவருடனும் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி இருவரையும் பயிற்சியாளர்களாக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் இவர்கள் விருப்பப்படி துணைப் பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ள, அணித் தேர்வில் ஈடுபட அதிகாரம் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2023 உலகக் கோப்பை வரை வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.