பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்கள் இருவர் பிரதமர் இம்ரான் கான் பின்னணியுடன் தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 உலகக் கோப்பையுடன் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய பயிற்சியாளர் குழுவை தேர்வு செய்யும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமை தேர்வாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளராகவும், வக்கார் யூனிஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் இம்ரான் கான் இவர்களுக்கு சிபாரிசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவருடனும் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி இருவரையும் பயிற்சியாளர்களாக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் விருப்பப்படி துணைப் பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ள, அணித் தேர்வில் ஈடுபட அதிகாரம் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2023 உலகக் கோப்பை வரை வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



