உலக ஆடவர் குத்துச்சண்டை: காலிறுதியில் அமித், மணிஷ், சஞ்சித்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக், சஞ்சித் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
உலக ஆடவர் குத்துச்சண்டை: காலிறுதியில் அமித், மணிஷ், சஞ்சித்
Published on
Updated on
1 min read


உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக், சஞ்சித் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆடவர் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
52 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியன் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியின் பட்ஹான் சிப்ஸியை எளிதில் வென்றார்.  63 கிலோ பிரிவில் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் நான்காம் நிலை வீரர் மங்கோலியாவின் சின்úஸாரிக்கை வீழ்த்தினார்.
ராணுவத்தைச் சேர்ந்த இருவரும் இந்த உலகப் போட்டியில் பதக்கம் வெல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எடையான 91 கிலோ பிரிவில் இந்திய வீரர் சஞ்சித் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் டுர்ஸுனோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்திய வீரர்கள் மூவர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com