அமெரிக்க ஓபன்: ரோஜர் ஃபெடரரிடம் சரணடைந்த இந்திய வீரர்

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜாம்பான் வீரர் ரோஜர் ஃபெடரர், இளம் இந்தியா வீரர் சுமித் நாகலை (22) எதிர்கொண்டார்.
அமெரிக்க ஓபன்: ரோஜர் ஃபெடரரிடம் சரணடைந்த இந்திய வீரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜாம்பான் வீரர் ரோஜர் ஃபெடரர், இளம் இந்தியா வீரர் சுமித் நாகலை (22) எதிர்கொண்டார்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றை 4-6 என கைப்பற்றி ஃபெடரருக்கு நாகல் அதிர்ச்சியளித்தார்.

2003-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்சுற்றுப் போட்டியின் முதல் செட்டை ஃபெடரர் இழப்பது இதுவே முதன்முறையாகும்.

2 மணிநேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுதாரித்துக்கொண்ட ஃபெடரர் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றினார்.

இதனால் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com