தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

யூரோ 2020: பிரான்ஸ், இங்கிலாந்து அபாரம்

யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு மாசிடோனியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் மான்டிநீகரோ அணியை வென்றது.

News image

கோலடித்த மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள்.

Updated On :26 மார்ச் 2019, 7:40 pm


யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு மாசிடோனியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் மான்டிநீகரோ அணியை வென்றது.
மான்டிநீகரோ வீரர் மார்கோ வெúஸாவிக் தனது அணிக்கு முதல் கோலை அடித்ததால் இங்கிலாந்து வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்து ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மைக்கேல் கீன் முதல் கோலை அடித்தார். பின்னர் பர்கிலே இரண்டு கோல்களை அடித்த நிலையில், கேப்டன் ஹாரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங் ஏனைய கோல்களை அடித்தனர். இறுதியில் 5-1 என வென்றது இங்கிலாந்து.
குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது அந்த அணி.
பிரான்ஸ் அபாரம்
 குரூப் எச் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை பந்தாடியது. இளம் வீரர் கிளியன் மாப்பே, ஆன்டன் கிரீஸ்மேன், ஒலிவியர் ஜிரெளட் கோலடித்தனர்.
அடுத்த ஆட்டத்தில் ஜூன் 8-ஆம் தேதி துருக்கியுடன் மோதுகிறது பிரான்ஸ்.
ரொனால்டோ காயம்
லிஸ்பனில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல்-செர்பியா இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. காலில் காயம் ஏற்பட்டதால் இடையிலேயே வெளியேறினார் நட்சத்திர வீரர் ரொனால்டோ. இது போர்ச்சுகல் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அடுத்து நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல்-ஸ்விட்சர்லாந்து அணிகள் ஜூன் 5-ஆம் தேதி மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.