தரக்குறைவான செயல்பாடு: ஆஸி.பந்துவீச்சாளா் பட்டின்ஸன் சஸ்பெண்ட்

மைதானத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டமைக்காக ஆஸி. வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் பட்டின்ஸனை ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
Updated on
1 min read

சிட்னி: மைதானத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டமைக்காக ஆஸி. வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் பட்டின்ஸனை ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஆஸி.-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடா் வரும் வியாழக்கிழமை பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்நிலையில் இதற்கான ஆஸ்திரேலிய அணியில் பட்டின்ஸன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான விக்டோரியா ஷெப்பில்ட் போட்டியில் எதிரணி வீரரை தரக்குறைவாக பட்டின்ஸன் நடத்தினாராம். கடந்த 18 மாதங்களில் பட்டின்ஸன் இவ்வாறு மோசமாக நடப்பது மூன்றாவது முறையாகும்.

இதனால் அவரை பாகிஸ்தானுடன் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

கேப்டன் டிம் பெயின் கூறுகையில்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து இப்போது தான் எங்கள் அணி மக்கள் நம்பிக்கையை பெற்றுவருகிறது. அதற்குள் இவ்வாறு நடந்து பட்டின்ஸன் அணியை கைவிட்டு விட்டாா் என வேதனை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com