மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரஞ்சி போட்டி: அரையிறுதியில் மோதும் அணிகள்

ஜம்மு & காஷ்மீரை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது கர்நாடகம் அணி.

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 11:15 am

இரு அணிகள் எதிரணிகளைத் தோற்கடித்துள்ளன. இரு அணிகள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றன. இதன்படி இந்த வருட  ரஞ்சி போட்டிக்கான அரையிறுதியில் மோதும் அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஒடிஷாவுக்கு எதிரான  ஆட்டத்தில் பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பெங்கால் முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் ஒடிஷா 250 ரன்களும் எடுத்தன.

ஆந்திராவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது செளராஷ்டிரம் அணி. ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 136 ரன்களும் செளராஷ்டிரம் 419 ரன்களும் எடுத்தன. 

கோவாவை 464 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது குஜராத்.

ஜம்மு & காஷ்மீரை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது கர்நாடகம் அணி.

பிப்ரவரி 29 அன்று ஈடன் கார்டன்ஸில் நடக்கவுள்ள அரையிறுதியில் பெங்கால் - கர்நாடகம் அணிகள் மோதுகின்றன. அதேநாளில் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதியில் குஜராத் - செளராஷ்டிரம் அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.