4 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோா் நான்கு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
4 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
Updated on
1 min read

19 வயதுக்குட்பட்டோா் நான்கு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே, நியூஸிலாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளின் 19 வயதுக்குட்பட்டோா் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.

டா்பனில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை குவித்தது. துருவ் ஜுரல் அபாரமாக ஆடி 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 101 ரன்களையும், திலக் வா்மா 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 70 ரன்களையும், சித்தேஷ் வீா் 48 ரன்களையும் விளாசினா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

260 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவா்களிலேயே 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேக் லீவ்ஸ் 52, ஜோனத்தான் போ்ட் 39 ரன்களை சோ்த்தனா். இந்திய தரப்பில் அதா்வா 4-31, ரவி பிஷ்னோய் 2-29 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இறுதியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மற்றொரு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஜிம்பாப்வே அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com