Enable Javscript for better performance
Sam Curran tests negative for COVID 19, confirms ECB- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா அச்சம் தீர்ந்தது: முதல் டெஸ்டில் விளையாடவுள்ள சாம் கரண்!

    By DIN  |   Published On : 04th July 2020 10:26 AM  |   Last Updated : 04th July 2020 10:26 AM  |  அ+அ அ-  |  

    sam_curran1

     

    வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

    டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது. லண்டனில் வசிக்கும் மே.இ. தீவுகள் பயிற்சியாளர் பில் சிமன்ஸ், அணியினருடன் இணைந்துகொண்டுள்ளார். அனைவரும் எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்டில் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கூடவே பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கிலாந்து அணியினர் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ஆல்ரவுண்டர் சாம் கரண், 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் கடந்த வியாழன் அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டார். இதனால் அவரைப் பயிற்சி ஆட்டத்திலிருந்து உடனடியாக விடுவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள சாம் கரணுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

    இந்நிலையில் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. நாளை அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் மறுபடியும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை 8 அன்று தொடங்கவுள்ள முதல் டெஸ்டில் சாம் கரண் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


    TAGS
    Sam Curran

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp