Enable Javscript for better performance
Experimental three team format to kick off South Africa's return to cricket- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    3டி என்கிற 3 அணிகள் ஆட்டம்: புதிய வகை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தும் தென் ஆப்பிரிக்கா!

    By DIN  |   Published On : 17th June 2020 04:16 PM  |   Last Updated : 17th June 2020 04:16 PM  |  அ+அ அ-  |  

    de_villiers1

     

    கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

    ஜூன் 27 அன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் கிங்பிஷர்ஸ், ஹாக்ஸ், ஈகிள்ஸ் என மூன்று அணிகள் விளையாடவுள்ளன. ஏபி டி வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், ரபடா ஆகிய மூவரும் இந்த அணிகளின் கேப்டன்களாக இருப்பார்கள். 

    டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்கள் உள்ளன. டி10 கிரிக்கெட் ஆட்டங்களும் லீக் அளவில் விளையாடப்படுகின்றன. அடுத்த வருடம் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரெண்ட் என்கிற இன்னொரு வகை கிரிக்கெட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

    மூன்று அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் விளையாடுவார்கள். 18 ஓவர்கள் இருமுறை என 36 ஓவர்கள் வீசப்படும். இதற்கு இடைவேளை உண்டு.

    ஒவ்வொரு அணியும் 12 ஓவர்கள் விளையாடவேண்டும். அது இரு 6 ஓவர்களாகப் பிரிக்கப்படும். முதல் ஆறு ஓவர்களில் ஒரு அணிக்கு எதிராக விளையாடி, மீதமுள்ள 6 ஓவர்களில் மற்றொரு எதிரணியுடன் விளையாட வேண்டும். இதனால் மூன்று அணிகளும் முதல் பாதியில் 18 ஓவர்கள் விளையாடியிருக்கும்  

    முதல் பாதியில் அதிக ரன்கள் எடுத்த அணி 2-வது பாதியில் முதலில் விளையாடும். 7 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிட்டால் 8-வதாக உள்ள வீரர் இரட்டைப் படையில் தான் ரன்கள் எடுக்க முடியும். முதல் பாதியிலேயே 7 பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்துவிட்டால் மீதமுள்ள பேட்ஸ்மேன் 2-வது பாதியில் தனது இன்னிங்ஸைத் தொடரலாம். 

    12 ஓவர்களுக்கும் சேர்த்து ஒரு புதுப் பந்து, பந்துவீச்சாளர்களுக்குத் தரப்படும். அதை இரு அணிகளுக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

    ஒரு பந்துவீச்சாளருக்கு அதிகபட்சமாக 3 ஓவர்கள் தரப்படும். 7-வது பேட்ஸ்மேனை வீழ்த்திவிட்டால் ஓவரைத் தொடர முடியாது. அந்த ஓவரில் மீதமுள்ள பந்துகளில் ரன் எடுக்கவில்லை எனக் கணக்கிடப்படும். 

    அதிக ரன்கள் எடுத்தால் தங்கம், 2-வது இடத்துக்கு வெள்ளி, 3-வது இடத்துக்கு வெண்கலம்.

    அதிக ரன்கள் எடுத்ததில் சமன் என்கிற நிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவரைக் கொண்டு தங்கம் வழங்கப்படும். மூன்று அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்திருந்தால் மூன்று அணிகளுக்கும் தங்கப் பதக்கம் கிடைக்கும். 2-வது இடத்துக்கு இந்த நிலை ஏற்பட்டால் வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்படும்.

    இந்த ஆட்டத்தில், விருப்பத்தின் பெயரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்கலாம் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மூன்று அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    டி20 போல இந்தப் புது வகை கிரிக்கெட் ஆட்டமும் ரசிகர்களின் ஆதரவைப் பெறுமா என்பது ஜூன் 27 அன்று தெரிந்துவிடும்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp