தோனியிடமிருந்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பைக் கற்றுக் கொண்டார் என சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு கூறியுள்ளார்.
இன்ஸ்டகிராமில் உரையாடிய ராயுடு கூறியதாவது:
ரோஹித் சர்மா மற்றும் தோனியின் தலைமைப் பண்பு குறித்து கேட்கிறீர்கள். கோலி, ரோஹித் சர்மா என எல்லோருக்கும் கேப்டனாக இருந்தவர் தோனி. இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய தோனியைப் பார்த்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பைக் கற்றுக்கொண்டுள்ளார். இரண்டிலும் வேறுபாடு இருக்காது. ரோஹித் சர்மா சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறார். தோனி சாதித்தவற்றை ரோஹித் சர்மா அடைய இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். ஆனால் நிச்சயம் அந்த இடத்தை அவர் அடைவார் என்று கூறியுள்ளார்.
2013 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடினார் ராயுடு. அதன்பிறகு சிஎஸ்கே அணி ராயுடுவைத் தேர்வு செய்தது. 2018-ல் ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே வென்றதில் முக்கியப் பங்கு வகித்தார் ராயுடு. அந்த வருடம் 16 ஆட்டங்களில் 602 ரன்கள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


