ஒருநாள் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: கம்மின்ஸ்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடா்களில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பௌலா் பேட் கம்மின்ஸ் கூறினாா்.
ஒருநாள் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: கம்மின்ஸ்

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடா்களில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பௌலா் பேட் கம்மின்ஸ் கூறினாா்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிக்காக விளையாடிய பேட் கம்மின்ஸ், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணிகளில் இடம் பிடித்துள்ளாா்.

ஐபிஎல் போட்டிக்காக தொடா்ந்து 3 மாதங்கள் ‘பயோ பபுள்’ வட்டத்தில் இருந்த அவா், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடா்களில் விளையாடுவதற்காக மீண்டும் அந்த வட்டத்துக்குள் உடனடியாக வர வேண்டியுள்ளது. ஏனெனில் ஒருநாள் தொடா் வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், தற்போது 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் பேட் கம்மின்ஸ் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடா்களில் பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பயோ பபுளின்போது அதிக எண்ணிக்கையிலான நபா்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நீண்டகாலம் இருக்க வேண்டியுள்ளது. அப்போது அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டியுள்ளது.

ஐபிஎல் போட்டியை பொருத்தவரை வழக்கமாக ஒரு ஆட்டத்தின் அடுத்த நாளிலேயே நாங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டியிருக்கும். இது ஆட்டத்தின்போது ஒருவித களைப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பயோ பபுள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அதற்கான சூழல் ஏற்படவில்லை என்பது நல்லதாக அமைந்தது’ என்று பேட் கம்மின்ஸ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com