பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ஃபெடரர் முடிவு

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ரோஜர் ஃபெடரர் முடிவெடுத்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ஃபெடரர் முடிவு

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ரோஜர் ஃபெடரர் முடிவெடுத்துள்ளார்.

ஆடவர் டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முன்னணி வீரராக உள்ளார் 39 வயது ரோஜர் ஃபெடரர். கடந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் ஃபெடரர் தோல்வியடைந்தார்.

காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஃபெடரர் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். கடந்த வருடம் அவருக்கு இரு அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஃபெடரர் அறிவித்துள்ளார். 

பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று தொடங்கவுள்ளது. 

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கடைசியாக 2019-ல் விளையாடிய ஃபெடரர், அரையிறுதியில் நடாலிடம் தோல்வியடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com