மயங்க் அகர்வாலுக்கு தலையில் காயம்: முதல் போட்டியிலிருந்து விலகல்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார்.

இதுபற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"வலைப்பயிற்சியின்போது தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ஹெல்மட்டில் திங்கள்கிழமை பந்து தாக்கியது.

பிசிசிஐ மருத்துவக் குழு அவருக்கு கன்கஷன் பரிசோதனை மேற்கொண்டது. அதில் கன்கஷனுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து அவர் விலகியுள்ளார்.

அவர் சீராக உள்ளார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்."

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com